என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பீகார் வாலிபர் பலி
நீங்கள் தேடியது "பீகார் வாலிபர் பலி"
பீகாரில் விபச்சார கும்பல் தங்கியிருந்த பகுதியில் வாலிபர் ஒருவர் இறந்த கிடந்ததற்கு அவர்கள் தான் காரணம் என கருதி பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாட்னா:
பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பிகியா அருகே தாமோதர்பூர் கிராமத்தில் பிம்லேஸ் ஷா (வயது 20) என்பவரை திடீரென காணவில்லை. எனவே ஊர்மக்கள் அவரை தேடிவந்தனர்.
அவர் பிகியாவில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே பிணமாக கிடந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கழுத்தை நெரித்து கொன்று அங்கு வீசியது தெரியவந்தது. அவரை யார் கொன்றார்கள் என்று தெரியவில்லை. அவர் இறந்து கிடந்த இடம் அருகே விபசார கும்பல் வசிப்பிடம் உள்ளது.
எனவே விபசார கும்பலை சேர்ந்தவர்கள் தான் அவரை கொலை செய்து தண்டவாளத்தில் போட்டிருக்க வேண்டும் என்று அந்த ஊர்மக்கள் கருதினார்கள்.
இதனால் தாமோதர்பூரை சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் விபசார கும்பல்களின் வீடுகளுக்கும், அங்கிருந்த கடைகளுக்கும் தீவைத்தனர்.
அதில் ஒரு பெண் தான் பிம்லேஸ் ஷா சாவுக்கு காரணம் என கருதினார்கள். அந்த பெண்ணை வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்தனர். பின்னர் அவரை நிர்வாணமாக்கினார்கள். அங்கிருந்து ஊர்வலமாக இழுத்து சென்றனர். வழியில் அவரை சரமாரியாக அடித்தும் உதைத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அந்த கும்பல் போலீசார் மீதும் தாக்குதல் நடத்தியது. போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு கிராம மக்களும் துப்பாக்கியால் சுட்டனர்.
போலீசார் தீவிர முயற்சிக்கு பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து ஓடினார்கள். அந்த பெண் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் நடந்தபோது அந்த வழியாக பயணிகள் ரெயில் ஒன்று சென்றது. அதன்மீதும் சரமாரியாக கல்வீசி தாக்கினார்கள்.
சம்பவம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு அவகாஸ்குமார் கூறும் போது, இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். சம்பவ பகுதியில் மேலும் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க அதிக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று கூறினார்.
பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பிகியா அருகே தாமோதர்பூர் கிராமத்தில் பிம்லேஸ் ஷா (வயது 20) என்பவரை திடீரென காணவில்லை. எனவே ஊர்மக்கள் அவரை தேடிவந்தனர்.
அவர் பிகியாவில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே பிணமாக கிடந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கழுத்தை நெரித்து கொன்று அங்கு வீசியது தெரியவந்தது. அவரை யார் கொன்றார்கள் என்று தெரியவில்லை. அவர் இறந்து கிடந்த இடம் அருகே விபசார கும்பல் வசிப்பிடம் உள்ளது.
எனவே விபசார கும்பலை சேர்ந்தவர்கள் தான் அவரை கொலை செய்து தண்டவாளத்தில் போட்டிருக்க வேண்டும் என்று அந்த ஊர்மக்கள் கருதினார்கள்.
இதனால் தாமோதர்பூரை சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் விபசார கும்பல்களின் வீடுகளுக்கும், அங்கிருந்த கடைகளுக்கும் தீவைத்தனர்.
அதில் ஒரு பெண் தான் பிம்லேஸ் ஷா சாவுக்கு காரணம் என கருதினார்கள். அந்த பெண்ணை வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்தனர். பின்னர் அவரை நிர்வாணமாக்கினார்கள். அங்கிருந்து ஊர்வலமாக இழுத்து சென்றனர். வழியில் அவரை சரமாரியாக அடித்தும் உதைத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அந்த கும்பல் போலீசார் மீதும் தாக்குதல் நடத்தியது. போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு கிராம மக்களும் துப்பாக்கியால் சுட்டனர்.
போலீசார் தீவிர முயற்சிக்கு பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து ஓடினார்கள். அந்த பெண் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் நடந்தபோது அந்த வழியாக பயணிகள் ரெயில் ஒன்று சென்றது. அதன்மீதும் சரமாரியாக கல்வீசி தாக்கினார்கள்.
சம்பவம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு அவகாஸ்குமார் கூறும் போது, இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். சம்பவ பகுதியில் மேலும் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க அதிக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று கூறினார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X